Thursday, April 9, 2009

வைகரைப் பொழுதுகள்




அந்த படித்துறையில் 
துள்ளு மீன்கள் 
கிள்ளிப்போகும் 
நீர் வளையங்களில் 
நெடு நேரமாய் 
தலை துவட்டும் 
நீள் வெண்ணிலவை 
குட்டுவைத்து 
குளம் இடிக்கும் 
அதே அத்திப்பழ மரத்தின் 
அடியினில்தான் 
அமர்ந்திருக்கிறேன் 
பழுத்த 
என் ரோமங்களை 
உன் நினைவுகளால் 
வருடியபடி..!

No comments:

Post a Comment